தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
பிகாரில் வழக்-கம்-போல் தேர்தல் கலவரம் - 6 பேர் சாவு

பாட்னா:

பிகாரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் கலவரத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.கலவரம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிகாரில் ராகோபூர், ஜாமி, நிர்சா ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை இடைத்தேர்தல்வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ராகோபூர் தொகுதியில் பிகார் முதல்வர் ராப்ரி தேவி போட்டியிடுகிறார்.சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் முதல் முறையாகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகோபூரில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது இரு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பல வாக்குச்சாவடிகளுக்குள் வன்முறைக் கும்பல் புகுந்து வாக்குச் சீட்டுகளைப் பறித்தது. இதையடுத்து, வன்முறைக் கும்பலைக்கலைக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மற்ற இரு தொகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. வன்முறைச் சம்பவங்களால் இரு தொகுதிகளில்சுமார் 40 சதவீத வாக்குகளும், ராகோபூர் தொகுதியில் 62 சதவீத வாக்குகள் பதிவாகின. சில வாக்குச் சாவடிகளில்90 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

வன்முறையில் ராகோபூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட சாந்தி தேவியின் கார் டிரைவர்கொல்லப்பட்டார். வன்முறைக் கும்பல் சுட்டதில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

வாக்குப்பதிவுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும் 50 பேருக்கு மேல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மூன்று தொகுதிகளிலும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது என்று மாநில டிஜிபி கே.ஏ. ஜேகப் தெரிவித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+