For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
திருச்சியில் போலீஸ் கான்ஸ்டபிள் தற்கொலை முயற்சி

திருச்சி:

திருச்சியில் விருந்தினர் மாளிகையில் ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்யமுயன்றார்.

தற்கொலை முயற்சியில் அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது பெயர் ராம் பிரபாத்.மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்.

திருச்சி விருந்தினர் மாளிகையில் இவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென்று துப்பாக்கியால் தன் நெற்றிப்பொட்டில் சுட்டுக் கொண்டு கீழேவிழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் விருந்தினர்மாளிகை சுவர்ப்பகுதி லேசாகச் சேதமடைந்தது.

யு.என்.ஐ

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X