தமிழகத்தில் இன்று
தனி ஈழம் அமைய சந்திரிகா விட்டுக்கொடுக்க வேண்டும் - மதுரை ஆதீனம்
திருநெல்வேலி:
தனித் தமிழ் ஈழம் அமைய இலங்கை அதிபர் சந்திரிகா பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றுமதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
தனிஈழம் பெறவது ஒன்றே இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். நெல்லையில்தாமிரசபை ஆன்மீக சிறப்பு விழாவின் தொடக்க விழா நடந்தது.
விழாமுடிந்தவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த மதுரை ஆதினம், இலங்கை தமிழர் பிரச்சனையைபொறுத்தவரை 1983 - ம் வருடம் வலியுறுத்திய கருத்தையே இப்பொழுதும் வலியிறுத்துகிறோம். தமிழ் ஈழம்பெறுதல் ஒன்றே இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும். வேறு எந்த முடிவும் சரி வராது.
இலங்கை அதிபர் சந்திரிகா இந்த விஷயத்தில் பிடிவாதம் செய்யாமல் விட்டுக்கொடுத்து போகவேண்டும். தமிழ்ஈழம் பெற்று யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆட்சி அமைவது உறுதி. அதில் எந்த மாற்றமும் இருக்க முடியாது. அப்படிஅமைவது ஒன்றே தமிழர் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும்.
மத்திய அரசு எந்த காரணத்தைக் கொண்டும் ராணுவத்தை அனுப்பக்கூடாது. ராணுவத்தை அனுப்பினால்இந்தியாவில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகும் என்றும் கூறினார்.