தமிழகத்தில் இன்று
டெல்லி:
சீனாவில் ஒரு வார கால சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் ஞாயிற்றுக்கிழமை சீனத் தலைநகர் பீஜிங்கிற்குப் புறப்பட்டுப்போனார்.
இரு தரப்பு நல்லுறவு மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்தும் விதமாக குடியரசுத் தலைவர் சீனா சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை சீனாசென்ற குடியரசுத் தலைவரை, விமான நிலையத்தில் குடியரசுத் துணைத் தலைவர் கிஷன் காந்த், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும்,மூத்த அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
தனது பயணத்தின்போது, சீன அதிபர் ஜியாங் செமீன், பிரதமர் ஸூ ரோங்க்லி, தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் லீ பெங் ஆகியோரை குடியரசுத் தலைவர்நாராயணன் சந்தித்துப் பேசுவார்.
சீனக் கல்வியாளர்களையும் குடியரசுத் தலைவர் சந்திப்பார். பீஜிங் பல்கலைக்கழகத்திலும் அவர் உரை நிகழ்த்துவார்.
இதற்கு முன்பு 1994-ம் ஆண்டு கே.ஆர்.நாராயணன் சீனா சென்றுள்ளார். அப்போது அவர் குடியரசுத் துணைத் தலைவராக இருந்தார். நாராயணனுடன்,மனைவி உஷா நாராயணன், கனரக தொழில் துறை அமைச்சர் மனோகர் ஜோஷி, வெளியுறவுத் துறை செயலாளர் லலித் மான் சிங், எம்.பிக்கள் சுஷ்மாசுவராஜ், சுஷில் குமார் சிண்டே, சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரும் சென்றுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications