தமிழகத்தில் இன்று
பிஜி பிரதமர் 48 மணி நேரத்தில் விடுதலை: புரட்சிக்காரர்கள் அறிவிப்பு
சுவா:
புரட்சிக்காரர்களின் பிடியில் உள்ள பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்ளிட்ட 30 பேர் 48 மணி நேரத்திற்குள்விடுவிக்கப்படுவார்கள் என்று பிஜித் தீவில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த ஜார்ஜ் ஸ்பீட் கூறியுள்ளார்.
பிரதமர் செளத்ரி தலைமையிலான ஆட்சியை அதிபர் மாரா கலைத்த சில மணி நேரத்திற்குள் இந்த அறிவிப்பைஜார்ஜ் வெளியிட்டுள்ளார்.
பிஜி நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுநெருங்கி வருகிறது. 24 மணி நேரத்திற்குள் அவரை விடுவிக்க இயலாவிட்டாலும் கூட, 48 மணி நேரத்திற்குள்கண்டிப்பாக அனைவரும் விடுதலை செய்யப்படுவர்.
பிஜி பழங்குடித் தலைவர்கள் கொண்ட 15 பேர் குழுவுடன் பேச்சு நடத்தினேன். இது மிகவும் பலனுடையதாகஇருந்தது. இவர்களை ஞாயிற்றுக்கிழமையும் சந்திக்கவுள்ளேன் என்றார் ஜார்ஜ் ஸ்பீட்.
மே 19-ம் தேதி ஆயுதம் தாங்கிய புரட்சிக்காரர்களுடன் ஜார்ஜ் ஸ்பீட் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்துஆட்சியைப் பிடித்தார். பிரதமர் செளத்ரி உள்பட பலரை பிணைக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டார். பிஜிஇனத்தவரே ஆட்சியில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இழுபறியாக நீடித்து இந்தப் பிரச்சினைக்கு சனிக்கிழமை முடிவு வந்தது. பிரதமர் செளத்ரியை டிஸ்மிஸ் செய்துஅதிபர் மாரா உத்தரவிட்டார். இனிமேலும், செளத்ரி உள்ளிட்டவர்களை புரட்சிக்காரர்கள் பிடித்து வைத்திருக்கத்தேவையில்லை என்று அவர் அறிவித்தார். இதையடுத்து தற்போது அனைவரையும் விடுவிக்க புரட்சிக்காரர்கள்ஒத்துக் கொண்டுள்ளனர்.
மாராவுக்கு ராணுவம் தொடர்ந்து ஆதரவு:
இதற்கிடையே, அதிபர் மாராவுக்கு ராணுவம் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. திங்கள்கிழமைபுதிய அமைச்சரவையும், இடைக்கால பிரதமரும் அறிவிக்கப்படவுள்ளனர்.
இருப்பினும் மாராவின் நடவடிக்கைக்கு புரட்சிக்காரர்கள் மத்தியில் ஆதரவு இல்லை. அவரது முடிவை ஸ்பீட்நிராகரித்துள்ளர்.
பிஜி இனத்தவரே பிரதமர் பதவிக்கு வர வேண்டும். புரட்சிக்காரர்கள் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற தனதுநிபந்தனையில் ஜார்ஜ் ஸ்பீட் உறுதியாக இருப்பதாக அவர்களது சிறப்பு ஆலோசகர் ஜோ நடா கூறியுள்ளார்.அதிபர் மாரா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஸ்பீட் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications