தமிழகத்தில் இன்று
இலங்கை ராணுவ வீரர்கள் உயிருக்கு இந்தியா பொறுப்பில்லை"
சென்னை:
இலங்கையில் மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசு உதவி செய்தாலும் கூட அங்குள்ள ஒரு சிப்பாயின் உயிருக்கு கூட உத்திரவாதம் தரமுடியாது என்றுபாரதிய ஜனதாக் கட்சியின் துணைத்தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இலங்கையில் சிக்கித் தவிக்கும் சிப்பாய்களை மீட்க இந்தியாவின் உதவியை கோரினால் ஒரு சிப்பாயின் உயிருக்குக் கூட மத்திய அரசு பொறுப்பு ஏற்கதயாராக இல்லை. இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் தரவேண்டும் என்ற கோரிக்கை எங்களுக்கு உடன்பாடனது அல்ல. தனி ஈழம் அமைவதைக்கண்டு இந்தியா பயப்படவில்லை.
நீங்கள் இலங்கை ராணுவ வீரர்களை மீட்கும் போது இந்தியாவின் விமானத்தை புலிகள் தாக்கினால் என்ன செய்வீர்கள் என்ற நிருபர்களின் கேள்விக்கு.இலங்கை ராணுவவீரர்கள் ஒருவரின் உயிருக்கு கூட இந்திய அரசு பொறுப்பு ஏற்க தயாராக இல்லை. இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் சேர்ந்துகோரிக்கை வைத்தால் தான் இந்தியா தலையிடும்.
இலங்கையில் சிப்பாய்களை மீட்பது என்பது மனிதாபிமான அடிப்படையில் தான். இலங்கை தமிழர்கள் மீது தான் நாங்கள் அனுதாபப்படுகிறோம். புலிகள் மீதுஅல்ல. இலங்கை அரசின் பாரபட்சத்தால் தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு சட்டப்படி உள்ள உரிமைகள்தரவேண்டும். இந்தியாவில் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை சரியே என்று ஜனா.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.