தமிழகத்தில் இன்று
கொழும்பு:
யாழ்ப்பாணம் அருகே, சாவகச்சேரி மற்றும் கொழும்புத் துறையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டைநடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிறு பீரங்கிகள் மற்றும் மார்ட்டர்கள் மூலம் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதாகத் தெரிகிறது. அரசுத் தரப்பு செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,சனிக்கிழமை இரவு போர் நிறுத்தத்திற்கான அவகாசம் முடிந்தவுடன் விடுதலைப் புலிகள் தங்களது தாக்குதலைத்
தொடர்ந்தனர். ஞாயிற்றுக்கிழமையும் தாக்குதல் நீடித்தது. இலங்கை ராணுவமும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது.
வவுனியாப் பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த வெடியில் சிக்கி ஒரு போலீஸ்காரர், ஐந்து சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் இறந்தனர். நாலான்குளம்என்ற இடத்தில் சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. இவர்கள் ஜீப்பில் வவுனியாவிலிருந்து மன்னார் சென்று கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications