தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
வடகிழக்கு மாநிலங்களில் 12 தீவிரவாத அமைப்புக்களுக்குத் தடை

அகர்தலா:

தீவிரவாதத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 12 தீவிரவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. அதை ஒடுக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அங்கேசெயல்படும் 12 தீவிரவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அசாம், மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா வில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

1967 ம் ஆண்டு இயற்றப்பட்ட வன்முறைத் தடுப்புச் சட்டம் மற்றும் 1958 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்முறை ஏற்படும் இடங்களில் போலீஸ்பாதுகாப்பு ஏற்படுத்தும் சட்டம் போன்றவற்றின் கீழ் இந்த தடை அமுல்படுத்தப்பட உள்ளது.

தீவிரவாதம் ஏற்படாதவாறு தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களில் புறராணுவப் படையினர் நிறுத்தப்படுவார்கள். இந்த மாநிலங்களில் அமைதிசீர்குலையாதவாறு அவர்கள் எப்போதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சகச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+