தமிழகத்தில் இன்று
தொழிலதிபரிடம் பணம் வாங்கிய புகார்: பதவி விலகுகிறார் இஸ்ரேல் அதிபர்
ஜெருசேலம்:
பிரெஞ்சு தொழிலதிபரிடம் பணம் வாங்கிய புகார் தொடர்பாக இஸ்ரேல் அதிபர் இஸர் வெய்ஸ்மேன் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவித்துள்ளார்.
அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் அரி ஸுமர் இதுகுறித்து இஸ்ரேல் ரேடியோவுக்கு அளித்த பேட்டியில், ஜூலை 10-ம் தேதி அதிபர் தனது பதவியைவிட்டு விலகுவார் என்றார்.
துணைப் பிரதமரும் ராஜினாமா:
இதற்கிடையே, செக்ஸ் புகார் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட துணைப் பிரதமர் இட்சாக் மொர்டசாய் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.அவர் மீது மூன்று செக்ஸ் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
செக்ஸ் புகார் சுமத்தப்பட்ட முதல் இஸ்ரேல் அமைச்சர் மொர்டசாய் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் எஹுத் பராக்கிற்குஅவர் அனுப்பினார். தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக பதவி விலகுவதாக மொர்டசாய் கூறியுள்ளார்.