தமிழகத்தில் இன்று
டெல்லி:
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு குறித்து எங்களுக்கு அக்கறை உண்டு. தலிபான் அமைப்பை நாங்கள் கைவிடமாட்டோம் என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
அமெரிக்க வெளி"யுறவுச் செயலாளர் தாமஸ் பிக்கரிங் பாகிஸ்தான் செல்லவுள்ளார். இந்த நிலையில்ஆப்கானிஸ்தான் குறித்தும், அதைத் தங்கள் வசம் வைத்துள்ள தலிபான் மத அமைப்பினர் குறித்தும் முஷாரப்மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார்.
முஷாரப் தரப்பிலிருந்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தலிபான் அமைப்பினரின் கொள்கைகள், ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை. தலிபான்அமைப்பைக் கைவிடுவது இயலாத காரியம். பாகிஸ்தான் அந்தக் காரியத்தைச் செய்யாது.
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்தூன் பிரிவினர் பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்கள். பக்தூன் பிரிவினர்தான் தலிபான்அமைப்பில் பெரும்பாலும் உள்ளனர். எனவே, அவர்களைப் பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை.பூகோளரீதியிலும், வரலாற்று ரீதியிலும் ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் ஒன்றுதான் என்று முஷாரப்கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பகுதியில் உள்ள சில தீவிரவாதமுகாம்களை மூடிவிட தலிபான் அமைப்பு ஒத்துக் கொண்டுள்ளது. இந்த முகாமில் இருந்து செல்லும் தீவிரவாதிகள்,பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும், எனவே இவற்றை மூடிவிடுமாறும், சமீபத்தில்பாகிஸ்தான் வந்த ஆப்கன் உள்துறை அமைச்சரிடம் பாகிஸ்தான் கூறியது.இதையடுத்து அவற்றை மூட தலிபான்அமைப்பு முடிவு செய்துள்ளது.