For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
திருச்சி அருகே அலிகளுக்கு மறுவாழ்வு மையம்

திருச்சி:

திருச்சி அருகே, அலிகள் மறுவாழ்வு மையத்தை, திருச்சி மாநகராட்சி துணைமேயர் எமிலி ரிச்சர்டு திறந்துவைத்தார்.

திருச்சி அருகேயுள்ள வேங்கூரில் அலிகள் சங்க முப்பெரும் விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் பேசிய,திருச்சி மாநகராட்சி துணை மேயர் எமிலி ரிச்சர்டு மையத்தை திறந்து அலிகள் சோபனா, கஸ்தூரி ஆகியோருக்குசமுதாயக் காவலர் , கலாச்சாரக் காவலர் ஆகிய பட்டங்களை வழங்கி, மலர்கிரீடம் சூட்டினார்.

அலிகளைத் திருமணம் செய்து கொண்ட சங்கர், பெரியசாமி பொதுத்துறை நிறுவனத்தில் வேலைசெய்யும்நாச்சிமுத்து ஆகியோருக்கு பொன்னாடைகளை போர்த்தினார்.

விழாவில் பேசிய துணைமேயர் நாட்டில் யாரையும் கேவலப்படுத்த முடியாது. அலிகளை ஆண்டவன்பிறப்பிலேயே படைத்துள்ளார். அரசு எய்ட்ஸ் நோயாளிகள், தொழு நோயாளிகளுக்கு பல மறுவாழ்வுமையங்களை திறந்துள்ளது. அதே போல அலிகளுக்கும் மையம் அமைக்க வேண்டும். இங்கு பேசியவர்கள்அலிகளுக்கு நிலப்பட்டா வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்துப் பேசுவேன். கலெக்டர் தர மறுத்தால் எனது சொந்தப் பணத்தில்அலிகளுக்கு இடம் வாங்கிக் கொடுப்பேன். திருச்சி அருகே உள்ள சூரியூரில் 150 ஏக்கர் நிலத்தில் அமெரிக்காவில்உள்ள ஹோப் என்ற நிறுவனம் சார்பில் பல கோடிரூபாய் செலவில் மறு வாழ்வு மையம் அமைக்கப்படவுள்ளது.

அதில் தொழு நோயாளிகள். ஊனமுற்றவர்கள், முதியோர் மறுவாழ்வு மையங்கள் அமையவுள்ளது. அதில்அலிகளுக்கும் பங்கு இருக்கும். அலிகள் தைரியமாக பெண்கள் போன்று சமுதாயத்தில் நிற்க வேண்டும் என்றுபேசினார் துணைமேயர் எமிலி ரிச்சர்டு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X