செல்போன் மூலம் கிரிக்கெட் சூதாட்டம்: 7 பேர் கைது
தானே:
தொலைபேசி மற்றும் செல்போன் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 7 பேரைப் போலீஸார் கைதுசெய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானே, நாக்பாடா என்ற இடத்தில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதிச் சங்க குடியிருப்பில் சிலர்கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தானே போலீஸாருக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில், குறிப்பிட்ட ஒரு வீட்டுக்குப் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு 7 பேர்இருந்தனர். அவர்கள் ஆன்டிகுவாவில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையேநடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியை டிவி-யில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
டிவியில் பார்த்துக் கொண்டே அந்த கிரிக்கெட் ஆட்டத்தில் மீது தொலைபேசி மற்றும் செல்போன் மூலம் கிரிக்கெட்சூதாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக, கிரிக்கெட் சூதாட்டத்துக்கு முக்கியகாரணமாக இருந்த அஸ்வின் மானே மற்றும் ஜெயேஷ் மாகன், நிலேஷ் ஜோஷி, பங்கஜ், காரட் டின்டோவ்சா,அனித் ஷிர்வா, ராஜேஷ் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 7 தொலைபேசிகள், 7 செல்போன், 4 தொலைபேசி ரெக்கார்டர்கள், கலர் டிவி உள்ளிட்டஅனைத்து மின்னணுச் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, தொடர்ந்து விசாரணைநடைபெற்று வருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications