For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
பிஜித் தலைநகரிலிருந்து இந்தியர்கள் வெளியேற போலீஸ் உத்தரவு
பிஜித் தலைநகர் சுவாவில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதால், தலைநகரில் வசிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு பிஜி போலீஸ்எச்சரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு சுவாவில் திடீரென வன்முறை வெடித்தது. நாடாளுமன்றத்தை நோக்கி புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடின்ஆதரவாளர்கள் பயங்கர ஆயுதங்களுடன் முன்னேறினர்.
இந்த சம்பவத்தின்போது ஒரு போலீஸ்காரர் இறந்தார். பிஜி டி.வி அலுவலகமும் அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து சுவாவில் பரபரப்பான சூழ்நிலைஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைநகர் சுவாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுவதால், இங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பானஇடங்களுக்கு வெளியேறி விடுமாறு போலீஸார் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் இதுதொடர்பான உறுதியான தகவல் ஏதும் இல்லை.
Comments
Story first published: Monday, May 29, 2000, 5:30 [IST]