தமிழகத்தில் இன்று
ப்ரீடவுன்:
சியர்ரா லியோன் தீவிரவாதிகளால் பினைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமைதி காக்கும் படையினர் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
சியர்ரா லியோனில் எட்டு வருடமாக நடந்து வந்த உள்நாட்டுப் போருக்கு முடிவு கட்டும் வகையில் 1999-ம் ஆண்டு ஐ.நா தலையீட்டின் பேரில் உடன்பாடுகாணப்பட்டது. இதையடுத்து ஒப்பந்தம் சரியான முறையில் அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஐ.நா. அமைதி காக்கும் படை அங்குஅனுப்பப்பட்டது.
ஆனால் ஒப்பந்தத்தை மீறும் வகையில், இம்மாத துவக்கத்தில் புரட்சிகர ஐக்கிய முன்னணி தீவிரவாதிகள் திடீர் கலவரத்தில் இறங்கினர். அமைதிகாக்கும் படையினர் 500 பேரை அவர்கள் பிடித்து வைத்துக் கொண்டனர். அவர்களை பகுதி, பகுதியாக விடுவித்து வந்தனர். இதையடுத்து கூடுதல் அமைதிகாக்கும் படை வீரர்கள் அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது அனைவரையும் தீவிரவாதிகள் விடுவித்து விட்டதாக தெரிவதாக சியர்ரா லியோனுக்கான ஐ.நா. நடவடிக்கைக் குழு செய்தித்தொடர்பாளர் டேவிட் விம்ஹஸ்ட் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், அனைவரையும் தீவிரவாதிகள் விடுவித்து விட்டதாக நம்புகிறோம். இருப்பினும் இதுதொடர்பாக உறுதியான தகவல் ஏதும்எங்களுக்கு வரவில்லை.
சியர்ரா லியோனுக்குப் பக்கத்து நாடான லைபீரியாவின் தலைநகர் மோன்ரோவியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை 85 அமைதி காக்கும் படை வீரர்கள்வந்தனர். இதையடுத்து மேலும் 4 பேர் குறித்துத் தெரியாமல் இருந்தது. இருப்பினும் ரோக்பேரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு உடல்கள்அவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மே 22-ம் தேதி ஐ.நா. அமைதி காக்கும் படையினரின் சீருடை அணிந்த பல உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன.அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவை இருந்தன என்றார் டேவிட்.
அன்னான் மகிழ்ச்சி:
இதற்கிடையே, அமைதி காக்கும் படையினர் அனைவரும் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி தருவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் கூறியுள்ளார்.
அன்னான் கூறுகையில், இந்தப் பிரச்சினையில் தீர்வு ஏற்பட உதவிய, மேற்கு ஆப்பிரிக்க தலைவர்கள் குறிப்பாக லைபீரிய அதிபர் சார்லஸ் டைலர்நன்றிக்குரியவர் என்று கூறியுள்ளார்.