தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஆட்சியைப் பிடிப்போம் என ஜெ. பகல் கனவு காண்கிறார்: திருநாவுக்கரசு
திருச்சி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று ஜெயலலிதா கூறுவது வெறும் பகல்கனவு என்று எம்ஜிஆர் அதிமுக பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில்எம்ஜிஆர் அதிமுக தொடர்ந்து தேசிய ஜனநாயக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும். சரியாய் எப்போது தேர்தல்வரும் என்று கூற முடியாது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பாமகவும், மதிமுகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இதனால்தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.
வரும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் கண்டிப்பாய் ஜெயித்தே தீருவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறி வருகிறார். அது வெறும் பகல்கனவாகவே இருக்கும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications