தமிழகத்தில் இன்று
பாட்னா:
பிகார் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் தற்போது முதல்வராக உள்ள ராப்ரி தேவி வெற்றி பெற்றார்.
ராகோபூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் வீர தேவியை 61,819 வாக்குகள் வித்தியாசத்தில தோற்கடித்தார்.
முன்னதாக ராகோபூர் தொகுதியில் பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ராப்ரி தேவியின் கணவருமான லல்லு பிரசாத் யாதவ் வெற்றி பெற்றிருந்தார்.ஆனால், அவரை சிபிஐ கைது செய்துள்ளதை அடுத்தும், பிகார் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட ராப்ரி தேவி, சட்டப்பேரவைக்குத்தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதற்காகவும் அந்த தொகுதியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, தற்போது பிகார் சட்ட மேலவை உறுப்பினராக உள்ள ராப்ரி தேவி ராகோபூர் தொகுதியில் போட்டி வெற்றி பெற்றார். முதன்முறையாகசட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு ராப்ரி தேவி வெற்றி பெற்றுள்ளார்.
தனக்கு கிடைத்த இந்த வெற்றி சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று ராப்ரி தேவி கூறியுள்ளார். எனக்கு இந்த வெற்றியை அளித்ததன் மூலம்மாநிலத்தில் உள்ள மதவாத மற்றும் இனவாத சக்திகளுக்கு எதிராக நான் போராட மக்கள் ஆதரவளித்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு நான்நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
மேலும், ராஷ்டிரிய ஜனதா தளத்தை மக்கள் புறக்கணிக்கவில்லை என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தான் மக்கள் புறக்கணித்துள்ளனர் என்றும்அவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.