தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இலங்கைப் போர்: -மே-லும் 21 -கு-டும்-பங்-கள் ரா--மேஸ்-வ-ரம் வந்த-ன

ராமேஸ்வரம்:

இலங்கையில் நடக்கும் போரினால் பாதிக்கப்பட்ட 21 குடும்பத்தைச் சேர்ந்த 75 அகதிகள் தமிழகத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழகத்தின் கடற்பகுதியான ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.

இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை இரவிற்குள் ராணுவ வீரர்கள் அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் என்று விடுதலைப்புலிகள் இறுதிஎச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் அந்தக் கெடு முடிந்தபின்னும் ராணுவத்தினர் யாரும் அங்கிருந்து வெளியேறவில்லை.

இதையடுத்து தாங்கள் இறுதிக்கட்டத் தாக்குதலுக்குத் தயாராகிவிட்டதாகவும், போர் நடக்கும் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும்அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படியும் விடுதலைப்புலிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் அங்கு குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் வாழும் பொதுமக்கள் பலர் அங்கிருந்து படகு மூலம் தப்பி தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.

இலங்கைப்போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை அகதிகள் ராமேஸ்வரத்திற்கு தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றார்கள்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 21 குடும்பத்தைச் சேர்ந்த 75 அகதிகள் ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் 27 பேர் ஆண்கள், 23 பேர் பெண்கள், 25 பேர் குழந்தைகள். இவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு ராமநாதபுரம்மாவட்டக் கலெக்டர் மணிபாரதி உத்தரவிட்டுள்ளார். தற்போது தப்பி வந்துள்ள அகதிகள் அனைவரும் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+