தமிழகத்தில் இன்று
-பா-லீஸ் கண்-ணில் உண்-மை-யி-லே-யே மண்-ணைத் தூவி--ய சின்-ன-மா-ரி
சென்னை:
மூன்றாண்டுகள் நடந்த கடுமையான தேடலுக்கு பின் பிடிபட்ட பிரபல கொள்ளையன் சின்னமா-ரி, சென்னையில் திங்கள்கிழமை போலீஸ் பிடியில் இருந்து தப்பிஓட -முயன்றான். ஆனால், அவனை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை என பல வகைப்பட்ட குற்றங்களை புரிந்தவன் சின்னமாரி. இவன் மீது 58 வழக்குகள் போலீசாரால் பதிவுசெய்யப்பட்டு விசாரணையில் உள்ளன. சின்னமா-ரி தலைமையில் ஒரு கொள்ளைக் கூட்டமே சென்னையில் செயல்பட்டு வந்தது.
வீடுகளில் புகுந்து கொள்ளை அடித்தல், கத்தி முனையில் வழிப்பறி செய்தல் போன்ற குற்றங்கள் -மூலம் லட்சக்கணக்கில் பணம் கிடைத்ததால்தனிக்காட்டு ராஜா போல வாழ்ந்து வந்தான் சின்னமா-ரி. போலீசார் அவனை பிடிக்க -முடியாமல் கடந்த - 3 ஆண்டுகளாக திணறினர்.
சென்னை நகரில் சமீபத்தில் அவனது கைவ-ரிசை அதிகமானதால் போலீசார் தீவிரமடைந்தனர். போலீஸ் துணை கமிஷனர் சிவனாண்டி தலைமையில் தனிப்படைஅமைத்து சின்னமா-ரியை தேடினர். அதன் விளைவாக கடந்த வாரத்தில் திருவான்மியூர் அருகில் அவன் கைது செய்யப்பட்டான்.
இப்போது அவனிடம் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள், பணம் ஆகியவற்றை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதற்காக சின்னமாரியைபலத்த போலீஸ் காவலுடன் போலீஸ் ஜீப்பில் அரும்பாக்கத்தில் இருந்து வளசரவாக்கத்திற்கு திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு அழைத்துச் சென்றனர்.
வடபழனி அருகே 100 அடி ரோட்டில் ஜீப் வரும்போது வண்டியில் இருந்து சின்னமாரி திடீரென்று கீழே குதித்தான். உஷாரான போலீசார் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி அவனை துரத்தினர். சாலையில் கிடந்த மண்ணை அள்ளி போலீசா-ரின் கண்களில் தூவினான் சின்னமா-ரி.
இதனால் நிலை குலைந்த போலீசார் திணறினர். ஆனால், இன்ஸ்பெக்டர் ஒருவர் அதையும் பொருட்படுத்தாமல் சின்னமாரியை பிடித்து விட்டார். சின்னமாரிபோலீஸ் காவலில் தப்பிச் செல்ல -முயல்வது இது -மூன்றாவது -முறை. ஏற்கனவே இரண்டு -முறை அவன் தப்பிச் சென்றவன்.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவன் ஜெயிலரை உயிரோடு எ-ரித்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடினான். அதற்கு முன்பாக 1997ம்ஆண்டு மதுரையில் இருந்து சென்னைக்கு சின்னமா-ரியை கொண்டு வரும் போது செங்கல்பட்டில் தப்பி ஓடினான்.












Click it and Unblock the Notifications