தமிழகத்தில் இன்று
ஈரானில் போதைப் பொருள் கடத்திய 18 பேர் கைது; 3 டன் ஹெராயின், ஓபியம் பறிமுதல்
டெக்ரான்:
ஈரான் போலீசார் போதைப் பொருட்கள் கடத்தியது தொடர்பாக 18 பேரைக் கைது செய்து மூன்று டன் போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
ஈரானின் தெற்குகிலுள்ள பார்ஸ் மாநிலத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சனிக்கிழமைமுதல் போலீசார் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். சில இடங்களில் போலீஸாருக்கும், போதைப் பொருட்களை கடத்துபவர்களுக்கும்இடையே மோதல் ஏற்பட்டது.
போலீஸ் வேட்டையில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 டன் ஓபியம், ஹெராயின், ஹேசிஷ் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
ஆப்கானிஸ்தானிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் போதைப் பொருட்களை கடத்துவதற்கு ஈரான் முக்கிய மையாக திகழ்வதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications