தமிழகத்தில் இன்று
முதல்வருக்காக பதவியைத் தியாகம் செய்த புதுவை எம்.எல்.ஏ.
புதுவை:
புதுவை முதல்வர் பி. சண்முகத்துக்காக, தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்ஏனம் தொகுதி உறுப்பினர் மல்லாடி கிருஷ்ண ராவ்.
1996-ம் ஆண்டு புதுவை சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டகிருஷ்ணராவ், தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளரை 4,843 வாக்குகள் வித்தியாசத்தில்தோற்கடித்தார்.
தற்போது புதுவை முதல்வராக உள்ள பி. சண்முகம், புதுவை சட்டப்பேரவை உறுப்பினராக இல்லை.சட்டப்பேரவை உறுப்பினராக அல்லாத நபர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்துக்குள்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால், புதுவை சட்டப்பேரவைக்கு இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்ப இல்லாத நிலையில், தனது உறுப்பினர்ராஜிநாமா செய்ததன் மூலம் அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளார் கிருஷ்ணாராவ்.
இத் தகவலை, சட்டப்பேரவைச் சபாநாயகர் ஏ.வி. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
யு.என்.ஐ.