தமிழகத்தில் இன்று
கார் திருடுவதில் பலே கில்லாடியான ராஜா கைது செய்யப்பட்டான்.
கார்களை கள்ளச் சாவி போட்டு திருடிச் செல்வதில் தலை சிறந்த திருடனாக இருப்பவன் ராஜா என்ற அழகு ராஜா. குற்றப் பிரிவு போலீசார் இவனை பலஆண்டுகளாக தேடி வந்தனர். அவர்கள் கண்ணில் படாமல் தன் கைவரிசையை இவன் காட்டி வந்தான்.
தனது திருட்டுத் தொழிலில் இவன் ஒரு கொள்கையை கடைப்பிடித்தான். டாட்ா சுமோ வகை கார்களைத் தான் இவன் அதிகம் திருடுவான்.அதுகிடைக்காதபட்சத்தில் அம்பாசிடர், அவ்வளவுதான். வேறு எந்த கார்களிலும் இவனுக்கு மோகம் இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த ராஜா சென்னையில்தான் திருட்டுத் தொழிலை செம்மையாக செய்து வந்தான். திங்கள் கிழமை அவன் போலீசிடம்சிக்கிக் கொண்டான். அவனிடம் இருந்து 4 டாட்டா சுமோ கார்களையும், ஒரு அம்பாசிடர் காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின்மதிப்பு மட்டும் ரூ 30 லட்சம் என்றனர் போலீசார்.












Click it and Unblock the Notifications