தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
இதயநோயால் பாதிக்கப்பட்ட நண்பரைக் கொன்றவர் கைது
ரோம்:

இத்தாலியில், நண்பர் இதய நோயால் அவதிப்பட்டு வந்ததால், அவர் தற்கொலை செய்து கொள்ள உதவிய இளைஞருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனைகிடைக்கவுள்ளது.

இத்தாலியின் துஸ்கானி பகுதியிலுள்ள விரக்கியோ என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. இறந்தவரின் பெயர் ஸ்டிபனோ டெல் கார்லோ. இவரது நண்பர்கைடோ. சிறிது காலமாக கார்லோ, இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்எனறு டாக்டர்கள் தெரிவித்திருந்தன். ஆனால் கார்லோவின் தந்தை, அறுவைச் சிகிச்சைக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இன்னொருவரின் இதயத்தை தனது மகனுக்குப் பொருத்த அவர் விரும்பவில்லை. இதனால் மனம் உடைந்த நிலையில் கார்லோ இருந்தார். இந்த நிலையில்தனது நண்பர் கைடோவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். இதையடுத்து கார்லோவுக்கு இன்சுலின் மருந்தை, ஊசி மூலம் கைடோ செலுத்தியுள்ளார். அதுஅவரது உயிரைப் பறித்தது.

நண்பரைக் கொன்ற குற்றத்திற்காக கைடோவை போலீஸார் கைது செய்தனர்.அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டு தண்டனை கைடோவுக்குக்கிடைக்கும். தெரிந்தே கொலை செய்த குற்றம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கைடோவை தாங்கள் மன்னித்து விட்டதாக கார்லோவின் பெற்றோர் கூறியுள்ளனர். அன்பின் காரணமாகவே கைடோ இவ்வாறுசெய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கார்லோவின் தந்தை பியட்ரோ டெல் கார்லோ கூறுகையில், எனது மகன் மீது கைடோ மிகுந்த பாசம்வைத்திருந்தார். பள்ளி நாட்களிலிருந்தே அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றார்.

கைடோவின் தாயார் எலியானா கூறுகையில், எனக்கு கைடோவை திட்டத் தோன்றவில்லை. இருப்பினும் அவருக்குத் தண்டனை கிடைக்கவிருப்பதுஎனக்கு வருத்தமாக உள்ளது என்றார்.

தெரிந்தே கொலை செய்வது, கருணைக் கொலை செய்வது இத்தாலியில் கடும் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு 6 முதல் 15 ஆண்டுகள் வரை தண்டனைகிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+