தமிழகத்தில் இன்று
ஜெ. பெயரில் ரூ. 31 லட்சம் முதலீடு: வங்கி மேலாளர் சாட்சியம்
சென்னை:
செகந்திராபாத் நகரிலுள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ. 31.10 லட்சம் பணத்தை முதலீடு செய்ததாககிளை மேலாளர் பிரபாகர், ஜெயலலிதா வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார்.
ரூ. 66.65 கோடி அளவுக்கு வருமானம் சேர்த்ததாக ஜெயலலிதா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் சாட்சி விசாரணை, முதலாவது சிறப்புநீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் முன்னிலையில் வியாழக்கிழமை நடந்தது.
அப்போது வங்கி மேலாளர் பிரபாகர் அளித்த சாட்சியம்:
1992-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி ரூ. 6.30 லட்சம், 1993-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி ரூ. 3 லட்சம், 1994-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதிரூ. 6.20 லட்சம், 1994-ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ. 12.60 லட்சம் பணம் ஜெயலலிதா பெயரில் வங்கியின் சேமிப்புக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டது.
1991-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கில் ரூ. 9.18 லட்சம் இருந்தது. 1996-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி ரூ. 3.84லட்சமாக இருந்தது. ஜெயலலிதாவுக்கு மொத்தம் ரூ. 3.17 லட்சம் வட்டியாக வழங்கப்பட்டது.
இதுதவிர, மாதாந்திர வட்டி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் ஜெயலலிதா, ரூ. 3 லட்சம் முதலீடு செய்திருந்தார். ஒவ்வொரு மாதமும் அவரது கணக்கிலிருந்ததுரூ. 10,000 பிடித்தம் செய்து, ரவீந்தர் ரெட்டி என்பவரின கணக்கிற்கு அனுப்பப்பட்டது. இந்தக் கணக்கு ஆந்திர வங்கியில் இருந்தது என்றார் பிரபாகர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications