தமிழகத்தில் இன்று
பிஜியின் இடைக்காலப் பிரதமரை நியமிக்கும் முடிவை ராணுவ ஆட்சியாளர்கள் விலக்கிக் கொண்டனர்.
சில நாட்களுக்கு முன் புரட்சியின் மூலம் பிரதமர் மகேந்திர சவுத்ரி, அமைச்சர்கள் உள்பட 30 பேரை சிறைப்பிடித்து வைத்துள்ள புரட்சிப் படையினர் எதிர்ப்பைஅடுத்து தனது முடிவை ராணுவ ஆட்சியாளர்கள் விலக்கிக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக, பிஜி ராணுவ கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் புரட்சிக் கும்பல் ஒன்று கடந்த மே 19-ம் தேதி பிஜி நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்படபலரைச் சிறைப்பிடித்து வைத்துள்ளது.
பிஜியில் இடைக்கால அரசு அமைப்பதற்கு முன் ராணுவ கவுன்சில் தனது எல்லா நடவடிக்கைகளையும் முடித்து விடவேண்டும் என்று கவுன்சில் தலைவர் பிராங்க்பெய்னிமாராமா விரும்புகிறார்.
ஆகவே, இடைக்காலப் பிரதமராக ராடு எபேலி நெய்லாடிகா அறிவிக்கப்பட்டதை புரட்சிப் படையினர் ஏற்காததை அடுத்து அந்த அறிவிப்பை ராணுவகவுன்சில் விலக்கிக் கொள்கிறது.
கவுன்சிலின் இப்போதைய ஒரே பணி, புரட்சிப் படையின் பிடியில் உள்ள பிரதமர் உள்பட அனைத்து பிணைக் கைதிகளையும் பத்திரமாக மீட்பதுதான். இதுதொடர்பாக, ஸ்பீட்டுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications