கபில், அசார், ஜடேஜா, பிரபாகர் சொத்துக்கள் மீது "கண் வைக்கிறது" வருமான வரித் துறை
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர்கபில்தேவ், அசாருதீன், ஜடேஜா, ஊழல் குற்றச்சாட்டகளைக் கூறிய பிரபாகர் உள்ளிட்டவர்களின் சொத்துக்கள்குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு சூதாட்டக்காரர்களிடமிருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக இந்தியமுன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் மீது சமீப காலமாக அதிக அளவில் குற்றச்சாட்டுகள்கூறப்படுகின்றன. இது தொடர்பாக, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்தி வருகிறது.
இந்திய வீரர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர்முதன் முதலில் கூறினார். தான் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக அறிவித்தஅவர், சில நாட்களுக்கு முன் சிபிஐ அலுவலகத்துக்கு நேரில் சென்று வாக்குமூலம் அளித்ததுடன், சில முக்கியஆவணங்களையும் சமர்ப்பித்தார்.
சூதாட்டக்காரர்களிடமிருந்து பெற்ற லஞ்சப் பணத்தில் நிறைய சொத்துக்களை கிரிக்கெட் வீரர்கள் வாங்கிக்குவித்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஊழல் புகார்கள் கூறப்பட்ட கபில்தேவ், அசார், ஜடேஜா,பிரபாகர் ஆகியோரது சொத்துக்கள் குறித்து வருமான வரித்துறை விசாரித்து வருகிறது.
லஞ்சப் பணத்தில் கிரிக்கெட் வீரர்கள் வாங்கியுள்ள சொத்துக்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை.அப்படி தகவல் கிடைத்தால் உடனே சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வீரருக்கு நோட்டீஸ் அனுப்பி அவரிடம் தீவிரவிசாரணை நடத்துவோம் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, சில கிரிக்கெட் வீரர்களுக்கு உள்ள சொத்துக்கள் குறித்த பட்டியலை சிபிஐ தயாரித்து வைத்துள்ளது.தகவல் கிடைத்தவுடன் அந்த சொத்துக்கள் பற்றி கிரிக்கெட் வீரர்களிடம் விசாரணை நடத்தப்படும். கிரிக்கெட்வீரர்கள் லஞ்சம் வாங்கினார்களா என்பது குறித்து முழு விசாரணையில் ஈடுபட்டுள்ளோம். ஆகவே, சொத்துக்கள்குறித்து உறுதியான தகவல் கிடைத்தவுடன் அவை பற்றி விசாரிப்போம் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications