தமிழகத்தில் இன்று
கேரளாவில் தென் மேற்கு பருவமழை துவங்கியது
திருவனந்தபுரம்:
கேரளா மற்றும் லட்சத் தீவுகளில் தென் மேற்கு பருவமழை வியாழக்கிழமை பெய்யத் துவங்கியது.
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் தேதி தென் மேற்குப் பருவ மழை துவங்கும். கேரள மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் கடந்த எட்டுமாதமாக நிலவி வந்த கடும் வெயிலும், வறட்சியும் குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் இந்த ஆண்டும் பருவமழை சரியான நேரத்தில்துவங்கியுள்ளது.
மே 15-ம் தேதி அந்தமான், நிக்கோபார் தீவுகளில் பருவமழை பெய்யத் துவங்கியது. அந்த சமயத்தில் ஜூன் 1-ம் தேதி கேரளத்தில் பருவமழைபெய்யத் துவங்கும் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் முன்னறிவிப்பு வெளியிட்டது.
கடந்த 25 ஆண்டுகளாக ஜூன் முதல் வாரத்தில்தான் பருவமழை துவங்கியுள்ளது. 1980-ம் ஆண்டு மட்டும்தான் சரியாக 1-ம் தேதி பருவமழை பெய்தது.இப்போது மறுபடியும் சரியான நேரத்தில் துவங்கியுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications