தமிழகத்தில் இன்று
-உ-ரு-வா-கி-ற--து காங்-கி-ரஸ்-மூப்-ப-னா-ர்-கம்-யூ-னிஸ்ட் கூட்-ட-ணி
சென்னை:
காங்கிரஸ் ஆசியுடன் புதிய அணிக்கான -முயற்சியில் ஈடுபட்டுள்ள தமாகா தலைவர்-மூப்பனாரை சென்னையில் மார்க்-சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.
தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சி குறித்தே இருதரப்பினரும் விவாதித்ததாக தெ-ரியவந்துள்ளது.
கடந்த -நாடாளுமன்றத் தேர்தல் வரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதி-முகஅணியில் இடம் பெற்றிருந்தது.
அதிமுக ஆதரவில் அக்கட்சி மதுரை -நாடாளுமன்றத் தொகுதியைவென்றது.தேர்தலுக்கு பின்னர் அதி-முக - மார்க்சிஸ்ட் உறவு சு-மூகமாக இல்லைஎன்பதே உண்மை.
"அதிமுகவுடன் -நாங்கள் வைத்திருந்தது தொகுதி உடன்பாடு தான். அது தேர்தலுடன்-முடிந்து விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவெளிப்படையாகவே இதை அறிவித்தார்.
இந்நிலையில் அதிமுகவுடனான ஆதரவுப் போக்கை குறைத்துக் கொண்டு, தமிழககாங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தனி அணியாக செயல்பட -மூப்பனார் -முடிவுசெய்துள்ளார். இவ்விரு கட்சிகளும் இணைந்து அதி-முக ஆதரவில்லாமல் தேனியில்-நாளை தனிப் போராட்டம் -நடத்துகின்றன.
மூப்பனாரின் இம்முடிவை ஆத-ரிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள், சென்னையில் -மூப்பனாரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் மத்தியக் குழு உறுப்பினர்என்.வரதராஜன் தலைமையில் அக்கட்சி -முக்கிய -நிர்வாகிகள் சிலர் இந்தபேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இப்பேச்சுவார்த்தை பற்றி வரதராஜன் கூறுகையில், ""பல்வேறு விஷயங்கள் குறித்துப்பேசினோம். குறிப்பாக புதிய அணியை ஏற்படுத்துதல் உள்பட தமிழக அரசியல்நிலவரம் குறித்து விவாதித்தோம். பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளைஎல்லாம் ஒன்று திரட்ட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். அதற்கானசாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications