காயமடைந்த சபா கரீமுக்கு சென்னையில் சிகிச்சை
சென்னை:
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் காயமடைந்த இந்திய விக்கெட் கீப்பர் சபாகரீமுக்கு, சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயாவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டாக்காவிலிருந்து கல்கத்தா கொண்டு வரப்பட்ட அவர், புதன்கிழமை இரவுசென்னைக்கு அழைத்து வரப்பட்டு சங்கர நேத்ராலயாவில் சேர்க்கப்பட்டார்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள்நடைபெற்று வருகின்றன. பங்களாதேஷ் அணிக்கு எதிராக திங்கள்கிழமை நடைபெற்றஆட்டத்தில் அவரது வலது கண்ணுக்குக் கீழே அடிபட்டது. இதையடுத்து உடனே,டாக்கா நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கண்ணுக்குக் கீழே அடிபட்டுள்ளதால், அவரை சென்னையில் உள்ள சங்கரநேத்ராலயாவில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர்சென்னைக்குக் கொண்டுவரப்பட்டார்.
சபா கரீமை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் அடுத்த 10 நாட்களுக்க சிகிச்சை பெறவேண்டும் என்று கூறியுள்ளனர். உடனடி அறுவை சிகிச்சை ஏதும் செய்யவேண்டியதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
காயம் காரணமாக, ஆசியக் கோப்பையிலிருந்து விலகிய சபா கரீமுக்குப் பதிலாகஇந்திய அணியில் மோங்கியா சேர்க்கப்பட்டுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications