தமிழகத்தில் இன்று
ஜில் நியூஸ்": தமிழகத்தில் ஏ.சி. மீதான வரி குறைகிறது
கோயம்புத்தூர்:
குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் பேட்டரிகள் மீதான விற்பனை வரியைக் குறைக்கதமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழகத்தின் வர்த்தக வரித்துறை முதன்மை கமிஷனர்பி.சி. சிரியாக் தெரிவித்தார்.
கோவையில் வர்த்தகம் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தில் அவர்திங்கள்கிழமை பேசியதாவது:
தமிழகத்தில் பல்வேறு பொருட்களின் மீதான விற்பனை வரியை தமிழகத் அரசுகுறைத்துள்ளது. மேலும், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் பேட்டரிகள் மீதானவிற்பனை வரியை 20 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஜவுளித் துறையில் மொத்த விற்பனைப் பொருட்களின் மீது விற்பனை வரித்துறைகூடுதல் வரி வசூலிப்பதாகப் புகார்கள் வருகின்றன. இப் பிரச்சினையைத் தீர்க்க, புதியநெறிமுறைகள் இயற்றப்படும்.
பருத்தி மீதான 2 சதவீத வரி ரத்து செய்யப்படாது. சமச்சீர் வரி விகிதம் 4 சதவீதத்துக்குக்குறையாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications