பிரெஞ்சு ஓபன்: அகாஸி தோல்வி - 10 ஆயிரம் டாலர் அபராதம்
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் தற்போதைய சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான அமெரிக்காவின்ஆந்த்ரே அகாஸி தோல்வியடைந்தார்.
ஸ்லோவேகியா நாட்டைச் சேர்ந்த கரோல் குசேராவுக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அவர் 2-6, 7-5, 6-1, 6-0என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
ஏற்கெனவே, உலகின் முதல் நிலை வீரரான அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தோல்வியடைந்த அகாஸி, ஆட்டத்துக்குப் பிறகு கட்டாயம் கலந்து கொள்ளவேண்டிய பத்திரிகையாளர் கூட்டத்தைப் புறக்கணித்ததற்காகஅவருக்கு ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் (10 ஆயிரம் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டது.
தோல்வியடைந்த அகாஸியை, பத்திரிகையாளர் கூட்டத்துக்கு அழைத்தோம். ஆனால், அவர் வர மறுத்துவிட்டார் என்று போட்டி அமைப்பாளர்கள்கூறினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய வீரர் மாரட் சபினுடன் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்தபோது கூட, அதற்குப் பிறகுநடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தை அகாஸி புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், காயம் காரணமாக அகாஸி மிகவும் சோர்ந்துவிட்டதாகவும், அதன் காரணமாக அவர் பத்திரிகையாளர் கூட்டத்தைப் புறக்கணித்ததாகவும்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications