கிரிக்கெட் வீரர்களின் வங்கிக் கணக்கைக் குறி பார்க்கிறது சிபிஐ
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களின் வங்கிக் கணக்கு பற்றிய விசாரணையை மத்தியபுலனாய்வுப் பிரிவு (சிபிஐ) மேற்கொண்டுள்ளது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கபில்தேவ், அசாருதீன், மோங்கியா, ஜடேஜா, அஜய் சர்மா, பிரபாகர் உள்ளிட்டோர் மீது புகார்கள்எழுந்துள்ளன. இது தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
சூதாட்டக்காரர்களிடமிருந்து வாங்கிய கோடிக்கணக்கான அளவுக்கு கிரிக்கெட் வீரர்கள் சொத்துக்கள் வாங்கிக் குவித்துள்ளதாக வந்த தகவல்களைஅடுத்து, வீரர்களின் சொத்துக்கள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே, கிரிக்கெட் வீரர்களின் வங்கிக் கணக்கு பற்றி சிபிஐ விசாரிக்க முடிவு செய்துள்ளது. மேலும், கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினர் மற்றும்நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடைய வங்கிக் கணக்கு பற்றியும் சிபிஐ விசாரிக்க உள்ளது.
இந்த விசாரணையின் மூலம் கிரிக்கெட் வீரர்களுக்கு வந்த பணம் பற்றி முழு தகவல்களையும் பெற முடியும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, வருமான வரித்துறையினரின் உதவியைக் கோர சிபிஐ முடிவு செய்துள்ளது. மேலும், ஹவாலா மோசடியில் கிரிக்கெட் வீரர்கள்ஈடுபட்டுள்ளனரா என்பதைப் பற்றி விசாரிக்க மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் உதவியைக் கோரவும் சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications