தமிழகத்தில் இன்று
ஹூண்டாய் கார்கள் விற்பனை அதிகரிப்பு
டெல்லி:
இந்தியாவில் ஹூண்டாய் கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது என்று அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடப்பு ஆண்டில் மே மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் நடுத்தர வகைக் காரான ஆஸன்ட் கார் விற்பனை 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, 7,561கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் 7,305 கார்கள் விற்பனையாகின.
2000-ம் ஆண்டின் முதல் 5 மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் மொத்தம் 39,397 கார்களை விற்பனை செய்துள்ளன. மே மாதத்தில் 5,851 சான்ட்ரோகார்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 29.4 சதவீதம் அதிகமாகும்.
1999-2000-ம் ஆண்டில் 60 ஆயிரம் சான்ட்ரோ மற்றும் ஆஸன்ட் கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதைவிட 25சதவீதம் அதிகமாக 75 ஆயிரம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் சான்ட்ரோ கார்களின் தேவை அதிகரித்து வருகிறது. மக்களிடேயை இந்த வகைக் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications