இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை போட்டியிலும் சூதாட்டம்
மும்பை:
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சமீப காலமாக கிரிக்கெட் விளையாட்டு பாதிக்கப்பட்டிருந்தாலும், கிரிக்கெட் சூதாட்டத்தில் சூதாட்டக்காரர்கள்தங்களுடைய தொழிலில் முழு மும்முரமாக உள்ளனர்.
டாக்காவில் ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சனிக்கிழமை நடந்த முக்கியமானபோட்டியிலும் சூதாட்டக்காரர்கள் முழு அளவில் தங்கள் தொழிலில் ஈடுபட்டதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் மிக முக்கியமானது என்பதால், அதிக அளவில் சூதாட்டத்தில் லட்சணக்கணக்கான பணம் புரண்டுள்ளது.கிரிக்கெட் சூதாட்டம் பற்றி சிபிஐ விசாரித்து வருவதால், வெளியே அதிகம் தெரியாத வகையில் மறைமுகமாக ஏறக்குறைய அனைத்து கிரிக்கெட்சூதாட்டக்காரர்களும் தங்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் வெல்லும் என்று ரூபாய்க்கு 65 பைசாவும், இந்தியா ஜெயிக்கும் என்று ரூபாய்க்கு 140 பைசாவும் பந்தயம் கட்டப்பட்டதாகசூதாட்டக்காரர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
போலீஸாரும், சிபிஐ அதிகாரிகளும் கண்டுபிடிக்க முடியாத வகையில் நவீன கருவிகள் உதவியுடம் கிரிக்கெட் சூதாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதாகக்கூறப்படுகிறது.
யு.என்.ஐ.