Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Subscribe to Oneindia Tamil

பிஜியில் இந்திய வம்சாவழியினர் மீது தாக்குதல் - வீடுகள் சூறை

சுவா:

பிஜி நாட்டில் நைடாசிரி மாகாணத்தில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர் மீது புரட்சிப் படைத் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட்டின் ஆதரவாளர்கள் கடுமையானதாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்தியர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.

பிஜியில் சில வாரங்களுக்கு முன் புரட்சியின் மூலம் பிரதமர் மகேந்திர சவுத்ரியையும் அமைச்சர்கள் சிலரையும், ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிப் படையினர்சிறைப்பிடித்து வைத்துள்ளனர்.

பிரதமர் சவுத்ரி இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்பதால், பிஜியில் வசிக்கும் இந்திய வம்சாவழியினருக்கு எதிராக நடவடிக்கைகளில் ஸ்பீட்டின்ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நைடாசிரி மாகாணத்தில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர் மீது பலத்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக மகேந்திர சவுத்ரியின் தொழிலாளர் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஸ்பீட்டின் ஆதரவாளர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து இந்திய வம்சாவழியினரின் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களைச் சூறையாடிவருகின்றனர்.

எதிர்ப்பவர்களை ஆயுதங்களால் தாக்கி வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்து பொருட்கள் எடுப்பதைத் தடுத்தால், வீட்டில் இருக்கும் பெண்களைக்கற்பழித்துவிடுமோம் என்று அவர்கள் மிரட்டி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டுள்ள அனைவரும் முகமூடி அணிந்துள்ளனர்.

இந்திய வம்சாவழியினர் வழிபடும் தேவாலயங்கள், கோயில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. அவற்றின்மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தாக்குதலில் இருந்த இந்திய வம்சாவழியினரைக் காக்க ராணுவம் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று தொழிலாளர் கட்சி குறை கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+