தமிழகத்தில் இன்று
நெடுமாறன் அமைப்பின் நிர்வாகிகளாக புலி அபிமானிகள் நியமனம்
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் ப.நெடுமாறன் தனது கட்சி நிர்வாகிகளாக விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களை நியமித்துள்ளார்.
தமிழர் தேசிய விடுதலை இயக்கம் அமைப்பு, தனி ஈழம் கோரி விடுதலைப் புலிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில், அந்த அமைப்பின் நிர்வாகிகளாக பல விடுதலைப் புலி அபிமானிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நெடுமாறன் அமைப்பின் நிர்வாகிகள் விவரம்:
துணைத் தலைவர்கள்: நெடும்கிள்ளி, புலவர் துரை மதிவாணன், குருசாமி, திருநாவுக்கரசு, சி.சி.சாமி, வீரப்பன்.
பொருளாளர்: மாணிக்கம்.
பொதுச் செயலாளர்: சுப்ரமணியம், பி.எம்.செல்வம், முருகேசன், பரந்தாமன், பழனியாண்டி.
இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர்: வியனரசு.
நிர்வாகிகள் அனைவரும் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள். இந்த அமைப்பின் தலைவராக,தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், முன்பு ஒருமுறை இருந்தது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications