தமிழகத்தில் இன்று
சியர்ரா லியோன் தீவிரவாதிகளிடமிருந்து முக்கிய பகுதியை மீட்டது இந்திய ராணுவம்
பிரீடவுன்:
சியர்ரா லியோன் தலைநகர் பிரீடவுனில், ஒரு மாதத்திற்கு முன்பு தீவிரவாதிகள் பிடித்த ரோக்பெரி ஜங்ஷன் என்ற பகுதியை அங்கு அமைதி காக்கும் பணியில்ஈடுபட்டுள்ள இந்தியப் படையினர் தீவிரவாதிகளை விரட்டி விட்டு மீட்டனர்.
வெள்ளிக்கிழமை இந்தப் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில், இந்தியப் படையினர் இயந்திரத் துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.கடும் சண்டைக்குப் பிறகு தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர்.
இந்தப் பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பு தீவிராதிகள் தாக்குதல் நடத்தியபோது நான்கு ஜாம்பிய நாட்டைச் சேர்ந்த அமைதி காக்கும் படையினர்கொல்லப்பட்டனர். அதன் பிறகு தீவிரவாதிகள் வசம் இப்பகுதி வந்தது. தலைநகர் பிரீடவுனிலிருந்து 87 கிலோமீட்டர் தொலைவில் இப்பகுதி உள்ளது.
ரோக்பெரி ஜங்ஷன் அமைதி காக்கும் படை வசம் வந்தது குறித்து சியர்ரா லியோனில் உள்ள ஐ.நா. அமைதி காக்கும் குழுவின் செய்தித் தொடர்பாளர்டேவிட் விம்ஹர்ஸ்ட் கூறுகையில், ஒரு மாதத்திற்கு முன்பு நாங்கள் இழந்த பகுதியை மீண்டும் பிடித்துள்ளோம். இப்பகுதி அமைதி காக்கும் படை வசம்வந்துள்ளதன் மூலம் தீவிரவாதிகள் கொட்டம் அடக்கப்பட்டுள்ளது என்றார்.
ரோக்பெரி ஜங்ஷன் பாதுகாப்புப் படை வசம் வந்துள்ளது, தலைநகர் பிரீடவுனில் பெரும் நிம்மதி அலையை ஏற்படுத்தியுள்ளது. அமைதி காக்கும் பணிக்குவந்துள்ள இங்கிலாந்துப் படையினர் விரைவில் சியர்ரா லியோனிலிருந்து கிளம்பவுள்ளதால், முக்கியப் பகுதி அமைதி காக்கும் படையிடம் வந்திருப்பதுதலைநகர் மக்களுக்கு நிம்மதியளித்துள்ளது.
தற்போது ரோக்பெரி ஜங்ஷனிலிருந்து, தீவிரவாதிகளின் பிடியில் உள்ள முக்கிய மற்றொரு முக்கிய இடமான லன்சார் 18 கிலோமீட்டர் தொலைவில்உள்ளது.சியர்ரா லியோனின் முக்கிய வைரச் சுரங்கம் இங்கு உள்ளது.