கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
லாகூருக்கு 200 சீக்கிய யாத்ரீகர்கள் பயணம்
லாகூர்:
ஜூன் 9-ம் தேதி வரும் சீக்கியர்களின் ஐந்தாவது மத குருவான அர்ஜூன் தேவின்நினைவு தினம் மற்றும் ஆண்டு தோறும் நடக்கும் விழாவையொட்டி 200 பேர்கொண்ட சீக்கியர்கள் குழு பாகிஸ்தானிலுள்ள லாகூர் நகருக்கு வந்துள்ளது.
ஜூன் 11-ம் தேதி வரை அனைவரும் லாகூரில் தங்கியிருப்பர். வெள்ளிக்கிழமைகாலை அனைவரும் நங்கனா சாஹிப் என்ற இடத்தை வந்தடைந்தனர். அங்குள்ளகுருத்வாரா ஜனம் ஸ்தனில் அவர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்தஇடத்தில்தான் குருநானக் தேவ் பிறந்தார்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பதாஷாஹி மசூதிக்கு அருகிலுள்ள குருத்வாரா தேராசாஹிப் பகுதியில் இந்திய சீக்கிய யாத்ரீகர்கள் ஜூன் 5-ம் தேதி வரை தங்கியிருப்பர்.அதன் பிறகு ஹசன் அப்தல் நகரில் உள்ள குருத்வாரா பஞ்சா சாஹிப்பிற்குச் செல்வர்.பின்னர் 9-ம் தேதி மீண்டும் லாகூர் திரும்புவர். அங்கு விழாவின் முக்கியப்பிரார்த்தனை நடக்கும்.
ஐ.ஏ.என்.எஸ்.