தமிழகத்தில் இன்று
"இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் அமைப்புகள் குரல் கொடுக்கவேண்டும்
சேலம்:
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ் ஈழம் ஒன்றுதான் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு என விடுதலைப் புலிகள் கூறுகின்றனர். இதுவே வைகோ மற்றும் எனது கருத்தும். ஒரு தமிழன்என்ற முறையில் இதைச் சொல்ல நாங்கள் வெட்கப்படவில்லை. இது எங்கள் உரிமை.
அனைத்து நாடுகளிலும், அங்கு வசிக்கும் அனைவருக்கும் சம உரிமை உள்ளது. எனவே அங்கு பிரச்சினை இல்லை. ஆனால் இலங்கையில் அப்படி இல்லை.சிறுபான்மையினரான தமிழர்கள் அங்கு இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் போல பகிரங்கமாக ஈழப் போருக்கு ஆதரவுதெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தது ஒரு பேரணியாவது நடத்தலாம்.அப்போதுதான் அவர்கள் கட்சியின் பெயரிலுள்ள தமிழ் என்பதற்குஅர்த்தம் இருக்கும்.
கிழக்கு பாகிஸ்தானில் முஜிபுர் ரஹ்மானின் தொடர் போராட்டத்தாலும், மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொடுத்தநெருக்குதல்களாலும்தான் வங்கதேசத்திற்கு விடுதலை கிடைத்து தனி நாடானது. இதை காங்கிரஸ் கட்சி மனதில் கொள்ள வேண்டும்.
மதிமுக நடத்தவுள்ள ஈழத் தமிழர் ஆதரவு பேரணியைத் தடை செய்வது குறித்து முதல்வர் கருணாநிதிதான் கருத்து சொல்ல வேண்டும். பேரணியைத் தடை செய்தால்,அது தமிழர்களின் உணர்வுகளைத் தடை செய்வது போலாகும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications