கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
விடுதலைப் புலிகளின் ஆயுத லாரியை தகர்த்தது ராணுவம்
கொழும்பு:
யாழ்ப்பாணம் வளைகுடாவிலுள்ள சிவியத் துறை பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் கொண்டு சென்ற லாரி மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் லாரிவெடித்துச் சிதறியது.
வெள்ளிக்கிழமை இரவு சிவியத் துறை பகுதியில் பாதுகாப்புப் படையினர் வாகனங்களின் போக்குவரத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவாகனம் மீது சந்தேகப்பட்டு அதன் மீது ஆர்ட்டில்லரி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த லாரி வெடித்துச் சிதறியது. லாரியில் விடுதலைப் புலிகளுக்குத்தேவையான வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தன.
இதற்கிடையே, கொழும்புத் துறையில், மூன்ற விடுதலைப் புலிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இதேபோல, மன்னார் பகுதியில் விடுதலைப்புலிகளின் மறைவிடம் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது விடுதலைப் புலிகள் பதிலுக்குத் தாக்குதல் தொடுத்தனர். அவர்களை நோக்கிராணுவம் திருப்பிச் சுட்டதில், நான்கு விடுதலைப் புலிகள் இறந்தனர்.
கிழக்கு மட்டகளப்பில் மின்சார டிரான்ஸ்பார்மரை விடுதலைப் புலிகள் குண்டு வைத்துத் தகர்த்தனர். இதனால் எரவூர் என்ற பகுதி முழுவதும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.