தமிழகத்தில் இன்று
பிஜி பிரச்சினைக்குத் தீர்வு - புரட்சிப் படைத் தலைவர் ஸ்பீட் தகவல்
சுவா:
பிஜி நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண ராணுவஆட்சியாளர்களுடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக புரட்சிப் படைத் தலைவர் ஜார்ஜ்ஸ்பீட் தெரிவித்தார்.
சில வாரங்களுக்கு முன் புரட்சியின் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ஸ்பீட்தலைமையிலான புரட்சிப் படையினர் பிரதமர் மகேந்திர சவுத்ரி மற்றும் அமைச்சர்கள்உள்பட 31 அரசியல்வாதிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
இந் நிலையில், இப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்காக, ராணுவ ஆட்சியாளர்களதலைமையகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்ற ஸ்பீட், சுமார் 9 மணி நேரம்பேச்சு நடத்தினார். பிஜியில் மீண்டும் ராணுவ ஆட்சியைக் கொண்டு வருவதுகுறித்தும், பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் இருதரப்பினரும் பேச்சி நடத்தினர்.
பேச்சுக்குப் பிறகு நிருபர்களிடம் ஸ்பீட் பேசினார். எங்களுக்கும், ராணுவஆட்சியாளர்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதைப் பற்றிஇப்போது சொல்லமுடியாது. எங்களுக்கு இடையே இருந்த தடைகள் விலகிவிட்டன.
இது தொடர்பாக திங்கள்கிழமையும் பேச்சு தொடரும் என்றார் ஸ்பீட்.