தமிழகத்தில் இன்று
த-னிமா-கா-ணத்-திற்-கு ஆத-ர-வு- பா-ஜ மாநி-லத் தலை-வர் கி-ரு-பா--நி-தி
கோவை:
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகார-மும், முழுஉ-ரிமையும் உடைய தனி மாகாணம் ஏற்படுத்தித் தருவதை பாரதியஜனதா கட்சி வரவேற்கிறது. ஆனால் தனி ஈழத்திற்கு ஆதரவு தர மாட்டோம் என தமிழ்-நாடு மா-நிலத் தலைவர்கிருபா-நிதி கூறினார்.
கோவையில் இன்று அவர் -நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகம் -மு-ழுவதும் -நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி மற்றும்பொதுமக்களின் கஷ்டங்களை அறிந்து வருகிறேன். கட்சிக்கு மேலும் தொண்டர்களைத் தேர்வு செய்யும் பணியில்ஈடுபட்டுள்ளேன். குறிப்பாக கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பி-ரிவைப் பலப்படுத்தவேண்டிய -நிலையில் உள்ளோம். அவர்களுக்கு எங்களது கொள்கையை எடுத்துச் சொல்லுவோம்.
இலங்கைப் பிரச்னையில் தேசிய ஜன-நாயகக் கூட்டணிக் கட்சிகளிடையே வேறுபாடு இருந்தாலும் அவர்களிடம்தொடர்ந்து பேச்சுவார்த்தை -நடத்தி வருகிறோம். ம.தி.-மு.க மற்றும் பா.ம.க.,ஆகியவை தங்களது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தங்கள் -நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இலங்கைக்கு இந்தியராணுவத்தை மீண்டும் அனுப்ப மாட்டோம். பேச்சுவார்த்தை -நடத்தி பிரச்னைக்குத் தீர்வு காண்பதே சிறந்த வழி.
இலங்கை அரசு தமிழர்களுக்கு தனி மாகாணம் அமைத்து, அனைத்து வசதிகளையும், அனைத்து உ-ரிமைகளையும்செய்து கொடுக்க வேண்டும்.
தமிழகத்திற்கு வரும் அகதிகளுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளது. அவர்களுக்குவேண்டிய உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளோம்.
அடுத்து வரும் தமிழகத் தேர்தலில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டால், அமைச்சரவையில் பா.ஜ இடம் பெறாது. ஆனால்,வெளியிலிருந்து ஆதரவளிக்கும்.
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள தென்னை விவசாயிகள் தேங்காய் விலை வீழ்ச்சியை கருத்தில்கொண்டு கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் எனக் கோ-ரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு கள்ளுக்கடைகளைத்திறந்தால் தேங்காய் விலை உயரும்போது கள்ளுக்கடைகளை -மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுப்பார்கள். எனவே, பாரதிய ஜனதா கள்ளுக்கடைகளைத் திறப்பதை ஆத-ரிக்காது.
தேங்காய் பருப்பிற்கான விலையை அரசு ரூ.32.50 ஆக -நிர்ணயித்துள்ளது. இவ்வாறு தமிழ்-நாடு பாரதிய ஜனதாகட்சியின் மா-நிலத் தலைவர் கிருபா-நிதி கூறினார்.
பேட்டியின்போது கோவை எம்.பி.,ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.