தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கோவில்கள் மீது இலங்கை ராணுவம் குண்டுவீச்சு: அகதிகள்

ராமேஸ்வரம்:

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள இந்து கோவில்களை சிங்கள ராணுவத்தினர் குண்டுவீசி தகர்த்துவருகின்றனர். என்று அங்கிருந்து தப்பிவந்த அகதிகள் வேதனையுடன் கூறினார்கள்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் சண்டையையடுத்து தொடர்ந்துதமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் வந்த கிரேஸ் ராணி என்ற பெண் நிருபர்களிடம் கூறுகையில், நான் இலங்கையில்ஊர்க்காவல் துறை என்ற இடத்தில் இருந்தேன். நாங்கள் மளிகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தோம். 2ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரில் என் கணவர் பலியாகிவிட்டார்.

அப்பொழுது நான் கர்ப்பிணியாக இருந்தேன். சிங்கள ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசியதில் என் கருகலைந்துவிட்டது. தற்போது சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துஇருக்கிறது.

சிங்கள ராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். விடுதலைப்புலிகளின் கைஒங்கிவருவதால், சிங்கள ராணுவத்தினர் இரவு பகலாக விமானம் மூலம் குண்டு வீசி தாக்கி வருகின்றனர். இதில்ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

மேலும் இந்துக்கள் வழிபடும் கோவில்களை தேடிகண்டுபிடித்து அவற்றின் மீது குண்டுவீசி தாக்கி வருகின்றனர்.இதனால் பல கோவில்கள் இடிந்த நிலையில் காட்சி அளிக்கின்றன. என்னுடைய கடையும் குண்டு வீச்சில் சேதம்அடைந்துள்ளது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+