தமிழகத்தில் இன்று
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் வரும் 10-ம்தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது.
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும் ஜூலை 9-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த தேர்தலில் தலைவர்பதவிக்கு நடிகர் விஜயகாந்தும், துணைத்தலைவர்கள் பதவிக்குநடிகை ராதிகா, நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோரும்,செயலாளர் பதவிக்கு நடிகர் சரத்குமாரும், பொருளாளராககே.காளையும் போட்டியிட உள்ளனர்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 24 பேர் போட்டியிடுகின்றனர்.இதில் திரைப்பட நடிக, நடிகையர் 12 பேரும் நாடக நடிகநடிகையர் 12 பேரும், போட்டியிட உள்ளனர்.
இத்தேர்தலை சுமூகமான முறையில் நடத்தி ஒரு மனதாகநிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என நடிக, நடிகையர்கள்விரும்புகின்றனர். அதற்காக நேற்று முன்தினம்,நேற்றும் நடிக,நடிகையர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. நடிக,நடிகையர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தேர்தலில் போட்டியிடுவோர் அனைவரும் ஒரே நாளில் வரும்10-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய முடிவு செய்தனர்.மேலும், அனைத்து பிரச்சினைகளையும் ஒட்டுமொத்தமாக பேசிமுடிவு செய்ய வரும் 6-ம் தேதி மீண்டும் நடிக, நடிகையர் கூட்டம்நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.