முகத்தில் தெளித்த சாரல்...
பூரி ஜெகந்நாதருக்காக ரூ. 65 கோடியில் வளர்க்கப்படும் மரங்கள்
பூரி:
ஒரிசா மாநிலம் பூரி நகரிலுள்ள ஜெகந்நாதர் ஆலயத்தில், உலகப் புகழ் பெற்ற தேர்த் திருவிழாவுக்கான தேரைத் தயாரிப்பதற்காக ரூ. 65 கோடியில்மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
ஜகந்நாதருக்குத் தேவையான தேரைத் தயார் செய்வதற்கு பாசி, அசானா, தருவா மரங்கள் வழக்கமாக வெட்டப்படும். இந்த மரங்கள் தற்போது ரூ.65 கோடி மதிப்பில் 2800 ஹெக்டேர் பரப்பளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. பூரி, குர்தா, நயாகர், கட்டாக், தேன்கனால் ஆகிய மாவட்டங்களில்மகாநதி ஆற்றங்கரையோரம் இந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் குழுவுக்குத் தலைவராக பூரியைச் சேர்ந்த திப்யா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மரம் வளர்க்கப்படும் மாவட்டங்களின்கலெக்டர்கள் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்திற்காக ரூ. 75 லட்சத்தை முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை இந்த நிதியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தைமாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார்.
ஜூலை 3-ம் தேதி தேர்த் திருவிழா நடைபெறவுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications