முகத்தில் தெளித்த சாரல்...
நவம்பருக்குள் பொதுத் தேர்தல்: அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அறிவிப்பு
கொழும்பு:
இந்த ஆண்டு நவம்பருக்குள் இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படும். எக் காரணம் கொண்டும்தேர்தல் தள்ளி வைக்கப்படாது என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பி.பி.சி. தொலைக்காட்சிக்கும், சிங்கள சந்தேஷயவுக்கும் திங்கள்கிழமை அவர் அளிதபேட்டி:
இலங்கையில் ஆகஸ்டுக்கு மேல் நவம்பருக்குள் பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்போதுள்ள சூழ்நிலையில் தேர்தலைத் தள்ளிவைக்க விரும்பவில்லை.
தேர்தலுக்கு முன் இலங்கையின் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள அனைத்தையும் ஜனநாயக முறையிலும்,அரசியலமைப்புச் சட்ட ரீதியாகவும் நீக்க அரசு முயற்சித்து வருகிறது. அந்த முயற்சி வெற்றியடையும்என்று நம்புகிறேன். நடப்பு நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் வரும் ஆகஸ்டில் முடிவடைகிறது.
இலங்கையின் வட பகுதியில் புலிகளுக்கும், ராணுத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதுஉண்மைதான். இருப்பினும், மீண்டும் ராணவத்திடம் இலங்கையின் வட பகுதிகள் வந்துவிடும் என்றுநம்புகிறேன். ஆனால், எந்த காலகட்டத்துக்குள் இது சாத்தியம் என்பதை நான் தெரிவிக்க முடியாது.
அதிகாரத்தில் பங்கு கொடுத்து பேச்சு வார்த்தைக்கு வரும்படி புலிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால், அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணமுயற்சி மேற்கொண்டுள்ள இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது மத்தியஸ்தம் செய்ய வந்துள்ள நார்வே நாட்டுக்கு இந்தியாவும், அண்டைநாடுகளும் உதவும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார் சந்திரிகா குமாரதுங்கா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications