தமிழகத்தில் இன்று
ரஷிய நாடாளுமன்றத்தில் இந்தியாவைப் பாராட்டிய கிளிண்டன்
மாஸ்கோ :
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வருவதை அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் ரஷ்யநாடாளுமன்றத்தில் பாராட்டிப் பேசினார்.
அமெரிக்க அதிபர் கிளின்டன் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான டுமாவில் திங்கள்கிழமை பேசினார். தனது பேச்சில் சமீபத்திய இந்தியப் பயணம் குறித்தும்குறிப்பிட்டார்.
கிளிண்டன் பேசுகையில், இந்தியாவில் தகவல்தொழில்நுட்பம் மிகத் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகிறது.ஆண்டு வருமானம் 400 டாலர்களே உள்ள ஏழைப் பெண்கள் கூட இன்டர்நெட் வசதி பெற்றுள்ளனர்.
பெண்கள் தங்கள் உடல்நிலை குறித்த விஷயங்களைக் கம்ப்யூட்டர் உதவியுடன் தெரிந்து கொள்கிறார்கள.
ஏழை நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர இந்தியாவைப் போன்று நவீன தொழில்நுட்ப வசதிகள்பயன்படுத்தப்பட வேண்டும் என்றார் கிளின்டன்.












Click it and Unblock the Notifications