தமிழகத்தில் இன்று
வவு-னியாவில் பெண்களுக்கு போர்ப் பயிற்-சி அளிக்கின்-ற-னர் புலிகள்
கொழும்பு:
இலங்கையில் போர் நடக்கும் வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில் ராணுவ -வீ-ரர்-க-ளை சமா-ளிக்-கும் வகையில் வவுனியா பகுதியிலுள்ள பெண்-கள்,குழந்தைகள் என அனைவருக்கும் விடு-த-லைப் பு-லி-கள் போர்ப் பயிற்சி அளித்-து வ-ரு-வ-தா-க -இ-லங்-கை அர-சு கூறி-யுள்-ள-து.
இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கூறியிருப்பதாவது:
போர் நடந்து வரும் வடக்கு யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இலங்கை அரசு அவர்களைத்தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது.
புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மக்களை அங்-கி-ருந்-து மீட்-க அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் விடுதலைப்புலிகளோ அவர்களைவ-வு-னி-யா-வி-லி-ருந்-து -வ-ளி--யே---ற விடாமல் தடுக்கின்றனர்.
கைத்தடி, அரியாலி, ஆகிய பகுதியிலுள்ள ஆண்கள், பெண்கள், பள்ளிக்குழந்தைகள் ஆகியோரை வவுனியாவுக்கு செல்லுமாறு புலிகள்நிர்பந்தப்படுத்துகின்றனர். வவுனியாவில் உள்ள அனைவருக்கும் விடுதலைப்புலிகள் போர்ப்பயிற்சி கொடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
தகவல் தொடர்பு அமைச்சர் மங்கள ஸ்மரம்வீரா கூறுகையில், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு 1948 முதல் இலங்கை அரசு அதிக அதிகாரத்தைக்கொடுத்துள்ளது. அவர்கள் அந்த அதிகாரத்தை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் தனி மாநிலமோ, ஈழமோ கேட்கவில்லை.
இலங்கையில் போர் வலுத்துள்ளதால் பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பத்திரிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மீண்டும்அமுலுக்குக் கொண்டு வரப்படும்.
கிழக்கு வடமராச்சி பகுதியில் கடல்புலிகள் தாக்குதலில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் காணாமல் போயுள்ளனர். அங்கேகடற்படையினருக்கும், கடற்புலிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் கடற்படையினர் புலிகளின் 4 படகுகளை சேதப்படுத்தியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications