தமிழகத்தில் இன்று
ஜி-15 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய தொழிலதிபர்கள் குழு தேர்வு
டெல்லி:
எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற உள்ள ஜி-15 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள 14 பேர் கொண்ட இந்திய தொழிலதிபர்கள் குழு தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
எய்கர் குரூப் நிறுவனங்களின் ஆலோசகரும், இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான சுபோத் பார்கவே தலைமையில் இக் குழுகெய்ரோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும்.
ஜூன் 13 முதல் 21 வரை உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெறும் தொழில் வட்டமேஜை மாநாட்டில் இந்தியக்குழு கலந்து கொள்ளும்.
உலக வர்த்தகம் மற்றும் பிராந்தியமயமாக்கல், தகவல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுற்றுலா வளர்ச்சி மற்றும் திட்டத்தில் ஒத்துழைப்பு, சமூகமற்றும் பொருளாதார வளர்ச்சியில் சிறுமற்றும் குறுந் தொழில் நிறுவனங்களின பங்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி இந்த உச்சி மாநாட்டில்ஆலோசிக்கப்படும்.
முன்னதாக ஜூன் 13-ம் தேதி நடைபெறும் தொழில் மற்றும் முதலீட்டு அமைப்பின் பொதுக் கூட்டத்தில் இந்திய தொழிற் குழு கலந்து கொள்ளும்.
யு.என்.ஐ.