மு-தல்-வ-ரின் பிற-ந்-த நாள் வசூல் ரூ. 39 லட்-சம்
கிளிண்டன் தலைமையில் இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தை
ஜெருசேலம்:
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தையின்அடுத்த சுற்று அமெரிக்காவில் அதிபர் பில் கிளின்டன் தலைமையில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.
இத் தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மெடலின் ஆல்பிரைட் தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள அவர்பாலஸ்தீன கட்டுப்பாட்டில் உள்ள ராமல்லா நகரில் அராபத்துடனும், ஜெருசலத்தில் இஸ்ரேல் பிரதமர் எஹுத் பாரக்குடனும் பேச்சு நடத்திய பிறகுநிருபர்களிடம் கூறியதாவது:
இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தை அடுத்த வாரம் வாஷிங்டனில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக, ஜூன் 14-ம் தேதி கிளின்டனைவெள்ளை மாளிகையில் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் சந்தித்துப் பேசுகிறார் என்றார் ஆல்பிரைட்.
ஆல்பிரைட்டுடன் பேச்சு நடத்தியபோது, இரு தலைவர்களும் ஒருவர் மீது குற்றம் கூறினர். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தடை ஏற்படுத்துவதாக இருநாடுகளும் குறை கூறிக் கொண்டன.
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்குத் தீர்வுகாண முயற்சி மேற்கொண்டு வரும் ஆல்பிரைட் யாசர் அராபத், மாரக் மற்றும் கிளின்டன் ஆகியோர்கலந்து கொள்ளும் உச்சிமாநாட்டுக்கு ஏற்பாடு செய்து வருகிறார். நிச்சயம் இம் முயற்சி பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும் என்றுகருதப்படுகிறது.