கபில் தேவை மாற்றுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - லேலே
துபாய்:
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கபில் தேவ் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிப்பது தொடர்பாகஇதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் லேலே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிநாட்டுச் செய்திப் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி:
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கபில் தேவ் உள்பட பலர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு(சி.பி.ஐ.) விசாரணை நடந்து வருகிறது.
இந் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கபில்தேவ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மதன் லால் நியமிக்கப்பட உள்ளார்என்று செய்திகள் வந்துள்ளன. கபில் தேவை மாற்றுவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும், இப் பிரச்சினையில்அதுபோன்ற எந்த யோசனையும் இல்லை.
மதன்லால் இப்போது இந்திய அணி தேர்வாளர் குழுவில் உள்ளார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்றார்லேலே.
யு.என்.ஐ.